Home விளையாட்டு இந்தியாவுடனான தோல்வி : மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர் : வைரலாகும் காணொளி

இந்தியாவுடனான தோல்வி : மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர் : வைரலாகும் காணொளி

0

ரி 20 உலககிண்ண தொடரில் நேற்று (09) இரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்(pakistan) அணி இந்தியா(india)விடம் 06 ஓட்டங்களால் தோல்வியடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத பாகிஸ்தான் வீரர் மைதானத்தில் அழுத காணொளி வைரலாகி வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 06 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ரி 20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்

வெற்றிபெற தேவையான ஓட்டங்கள்

இந்தப் போட்டியில் கடைசி 4 பந்துகளில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது, 8-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த நசீம் ஷா(Naseem Shah) இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவரால் எஞ்சிய 6 ஓட்டங்களை எடுக்க முடியவில்லை.

இதனால், வெற்றியின் அருகில் வரை வந்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற வேதனையில் நசீம் ஷா மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சவர்க்காரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அவரை சக துடுப்பாட்ட வீரரான ஷாகின் அப்ரிடி ஆறுதல் கூறி தேற்றினார்.

தோல்வியால் மிகுந்த வருத்தத்தில்

தோல்வியால் மிகுந்த வருத்தத்தில் இருந்த நசீம் ஷாவுக்கு இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா(rohit sharma) ஆறுதல் கூறினார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version