Home இலங்கை அரசியல் இலங்கையில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ள ஜெர்மனிய பெண் ராஜதந்திரி

இலங்கையில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ள ஜெர்மனிய பெண் ராஜதந்திரி

0

இலங்கைக்கு பணியாற்ற வந்துள்ள ஜெர்மனியை சேர்ந்த பெண் அதிகாரியின் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஜெர்மனியின் புதிய துணைத் தூதரக குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சாரா ஹெசல்பார்த் கொழும்பில் தனது அதிகாரபூர்வப் பணிகளை முச்சக்கர வண்டி சவாரி மூலம் ஆரம்பித்துள்ளார்.

இலங்கையில் இருப்பது மகிழ்ச்சியான அனுபவம் என தெரிவித்த ஹெசல்பார்த், தனது பயணத்தை உற்சாகத்துடன் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


பெண் ராஜதந்திரி

ஜெர்மனியின் தேசிய நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணிக்கும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன், எனது பயணத்தை தொடங்குவதில் உற்சாகமாக இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களின் விருந்தோம்பல் பற்றியும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார். இலங்கை மக்களின் விருந்தோம்பல் நம்பமுடியாத அளவுக்கு சிறந்தது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஜெர்மன் தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தமை எனக்கு பெரும் பாக்கியம்.

முச்சக்கர வண்டி சவாரி

நட்பு மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், இவை அனைத்தும் ஒரு முச்சக்கர வண்டி சவாரியுடன் தொடங்குகின்றன!” என அவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுடன் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த, அர்த்தமுள்ள திட்டங்களைச் செயல்படுத்தவும், நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் ஊக்கமாக செயல்படவுள்ளதாக ஹெசல்பார்த் தனது உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version