Home இலங்கை அரசியல் மயிலிட்டித்துறைமுக அபிவிருத்திப் பணிகள் அநுரவால் ஆரம்பம்

மயிலிட்டித்துறைமுக அபிவிருத்திப் பணிகள் அநுரவால் ஆரம்பம்

0

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று(01.09.2025)  காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளே ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீட்டின் கீழான 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகள், கடந்நொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியுள்ளன.

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வுகளில் பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version