Home இலங்கை அரசியல் ரணிலுக்கு கருணைத் தொகை வழங்க தயார்: திலித் ஜயவீர சாடல்

ரணிலுக்கு கருணைத் தொகை வழங்க தயார்: திலித் ஜயவீர சாடல்

0

எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வு பெற்றதன் பின்னர் தனது வாழ்வாதாரத்திற்கான கருணைத் தொகையை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் மாதாந்த வருமானத்தைப் பார்க்கும் போது தமக்கு வருத்தமாக இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பொருளாதாரம்

நாட்டின் சாமானிய மக்கள் வாழ முடியாத நிலையில் இவர்கள் வாழ்வது ஆச்சரியமளிப்பதாகவும், இவர்கள் அனைவரும் கறுப்புப் பொருளாதாரத்தில் அங்கம் வகிப்பதாகவும் வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அனுராதபுரம் கட பனஹ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வேட்பாளர் திலித் ஜயவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version