Home இலங்கை அரசியல் நுவரெலியாவில் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பம்

நுவரெலியாவில் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பம்

0

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் அனைத்தும்
நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் ஆறு இலட்சத்து 5,292 பேர்
வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த,
வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்
வாக்களிக்கவுள்ளனர்.

தகுதியான வாக்காளர்

இதில் நுவரெலியா-மஸ்கெலியா தொகுதியில் 347,646 வாக்காளர்களும், கொத்மலை
தொகுதியில் 88219 வாக்காளர்களும், ஹங்குராங்கெத்த தொகுதியில் 78,437
வாக்காளர்களும் மற்றும் வலப்பனை தொகுதியில் 90,990 வாக்காளர்களும் வாக்களிக்க
தகுதிப்பெற்றுள்ளனர்.

அத்தோடு, தபால் மூலம் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின்
எண்ணிக்கை 19,748 ஆகும் அத்தோடு 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் நுவரெலியாவில் அமைக்கப்பட்டுள்ளன.

நிலையங்கள் 

இதில் 41
வாக்கு எண்ணும் நிலையங்கள் நுவரெலியா காமினி மகா வித்தியாலயத்தில்
அமைக்கப்பட்டுள்ளதோடு, மிகுதி 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் நுவரெலியா மாவட்ட
செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 8500 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு,
பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் என 1,748 பேர்
கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும், நுவரெலியா மாவட்ட தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு 36 தேர்தல் முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மற்றும் பாரதூரமான முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை
எனவும் நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version