நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் அதிகரிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தல்காரர்களின் மையம்
இதேவேளை, இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மையமாக மாறி வருகிறதா என்ற சந்தேகம் நிலவுவதாகச் சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும், சுங்கத் திணைக்களத்திற்காக அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை, இன்னும் 3 வாரங்களுக்குள் அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை குறிப்பிட்டுள்ளார்.
