Home முக்கியச் செய்திகள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விவகாரம்: தயாராகும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விவகாரம்: தயாராகும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல்

0

புதிய விரிவான விசாரணைக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை இரகசிய காவல்துறையினர் தற்போது தயாரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் அப்போது விசாரணை நடத்தப்பட்ட விதம் மற்றும் அந்த விசாரணைகளின் போது ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து கண்டறிய இந்தப் பட்டியல்கள் தயாரிக்கப்படுகிறதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணைகளில் தெரியவந்த தகவலின்படி, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களமும் செயற்பட்டு வருவதாகத் குறிப்பிடப்படுகிறது.

அறிக்கைகள் 

இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் தேடிப்பார்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் நேற்றையதினம் தெரிவித்திருந்தார்.

அத்துடன், கடந்த ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பிலும் விரைவாக ஆராயப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  

NO COMMENTS

Exit mobile version