Home இலங்கை அரசியல் கொழும்பிலுள்ள வீட்டிலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்

கொழும்பிலுள்ள வீட்டிலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்

0

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான வீட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர வௌியேறியுள்ளார்.

குறித்த உத்தியோகபூர்வ இல்லம் சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு கையளிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும்.

அரசாங்கத்திற்கு சொந்தமான இல்லத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை அனுமதி

அதற்கான பிரேரணையை தாமே கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை பாடசாலையின் பணிகளுக்கு பயன்படுத்துவது தொடர்பான அனைத்து ஆவண பரிமாற்றங்களும் நிறைவடைந்துள்ளன.

அத்துடன், நேற்று முதல் உத்தியோகபூர்வ இல்லம் சிறிமாவோ பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version