Home இலங்கை அரசியல் பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்: அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்: அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் பல வருடங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாகவும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்துக்களை சிலர் ஆதரித்தாலும் பலர் அவற்றை கடுமையாக விமர்சித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார்? அதற்கு பின்னிணியில் செயற்பட்ட மிக முக்கிய சூத்திரதாரி யார் என்பதும் இதுவரையில் சரியான முறையில் இனங்காணப்படவில்லை என்றும் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய

பரந்துபட்ட அரசியல் கூட்டணி என்ற பெயரில் ரணிலின் புதிய காய் நகர்த்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

https://www.youtube.com/embed/j0qcg4uSYD8

NO COMMENTS

Exit mobile version