பாடசாலைகளில் மதக் கல்வி அல்லது அழகியல் பாடங்களைக் குறைக்கும் நோக்கம்
தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் பௌத்த மதப் பாடப்புத்தகத்தின் உள்ளடக்கங்கள்
குறித்து நேற்று(20.09.2025) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டு செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்களின்
கீழ், ஆரம்பத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து மதங்கள் பற்றிய அடிப்படை
புரிதல் அறிமுகப்படுத்தப்படும்.
சொந்த மதங்கள்
அதன் பிறகு மாணவர்கள் தங்கள் சொந்த மதங்களில் படிப்பைத் தொடருவார்கள் என்றும்
ஹரிணி குறிப்பிட்டுள்ளார்.
