Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது எமது வரலாற்றுக் கடமை : மணிவண்ணன் பகிரங்கம்

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது எமது வரலாற்றுக் கடமை : மணிவண்ணன் பகிரங்கம்

0

புதிய இணைப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலே தமிழ் பொது வேட்பாளரின் சின்னமாகிய சங்கிற்கு வாக்களிப்பது எமது வரலாற்றுக் கடமை என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் நேற்று (12) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாம் தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என இங்கே இருக்கின்ற பலர் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொருவரும் எமது இனத்திற்கு, மக்களிற்கு மாறி மாறி கதைகளை மட்டுமே பேசி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனை
ஆதரித்து யாழ்.அச்சுவேலி பகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது.

நேற்று (12) இரவு அச்சுவேலி, கதிரிப்பாய் முரசொலி சனசமூக நிலைய முன்றல்
குறித்த தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்
பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா,
யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், வடக்கு மாகாண
சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்
முன்னாள் தவிசாளர் தி.நிரோஸ், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்ஷன்,
பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Source: https://tamilwin.com/article/election-campaign-tamil-candidate-jaffna-1726205612

NO COMMENTS

Exit mobile version