Home இலங்கை அரசியல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சந்திப்பு

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சந்திப்பு

0

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது இன்று (08) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

வேட்புமனு கையேற்றல்

இதன் போது, தற்போதைய வேட்புமனு கையேற்றல் தொடர்பாகவும், எதிர்வரும்
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்தோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள் திணைக்கத்தின் பிரதி ஆணையாளார் எஸ்.அச்சுதன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version