சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்க சென்ற சக்தி தற்போது திரும்பி வரவில்லை.
ராமசாமி மெய்யப்பன் தான் சக்தியை கடத்தி அடித்து தாக்கி தலைகீழாக தொங்கவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்து ஜனனியும் கதறுகிறார்.
குணசேகரன் அவரிடம் போனில் பேசுவது இன்றைய எபிசோடு ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
இன்றைய ப்ரோமோ
சக்தியை காப்பாற்றுமாறு ஜனனி வந்து குணசேகரன் தரப்பிடம் கெஞ்சும் நிலையில், அவர் சமாதானத்திற்கு வந்ததை அவர்கள் நக்கல் செய்கின்றனர்.
அதன் பின் ஜனனி சக்தியை காப்பாற்ற ஒரு பெரிய முடிவை எடுக்கிறார். அதற்காக பெண்களிடம் அவர் சத்தியம் கேட்கிறார். ப்ரோமோவை நீங்களே பாருங்க.
