Home இலங்கை குற்றம் முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் மாயம்: அநுர மேற்கொள்ளவுள்ள அதிரடி நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் மாயம்: அநுர மேற்கொள்ளவுள்ள அதிரடி நடவடிக்கை

0

புதிய ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக பதவியேற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய
வாகனங்களை கையளிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

அநுர நடவடிக்கை

இந்நிலையில், குறித்த பணிப்புரைக்கைமைய கையளிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாயமான முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பில் அநுர குமார திசாநாயக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

NO COMMENTS

Exit mobile version