Home இலங்கை சமூகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட போலி நாணயத்தாள்கள் : தீவிரமடையும் விசாரணைகள்

காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட போலி நாணயத்தாள்கள் : தீவிரமடையும் விசாரணைகள்

0

போலி நாணய தாள்களை காவல்துறையினரிடம் நபரொருவர் ஒப்படைத்துள்ளதாக தொடங்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குறித்த நபர் நான்கு 5000 ரூபா போலி நாணயத்தாள்களை தொடங்கொட காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நபர் தொடங்கொட புஹபுகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சூதாட்ட மைதானத்தில் வைத்து இந்தப் பணத்தைக் கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

மேலதிக விசாரணை

இந்த நாணயத்தாள்கள் போலியானவை என்று கண்டு பிடிக்கப்பட்டதும் உடனடியாக காவல்நிலையத்தில் அதனை ஒப்படைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

போலி நாணயத்தாள்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பின் அந்த நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

NO COMMENTS

Exit mobile version