Home இலங்கை அரசியல் ஜனாதிபதியானால் எரிபொருள் விலையைக் குறைப்பேன் : ஜனக ரத்நாயக்க உறுதி

ஜனாதிபதியானால் எரிபொருள் விலையைக் குறைப்பேன் : ஜனக ரத்நாயக்க உறுதி

0

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை குறைப்பதே எனது முதல் கடமை என ஜனாதிபதி வேட்பாளரும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி ஆகும்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 2022 இல் செய்த 36 பில்லியன் மோசடி எரிபொருள் இறக்குமதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் (CIABOC) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு எரிபொருள் விலையை 200 ரூபாவினால் குறைக்கலாம் என நான் கூறினேன். இப்போது 150 ரூபாவினால் குறைக்க முடியும்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் மாதத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்துவேன்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/fuel-price-cut-if-elected-president-janaka-said-1725088233

NO COMMENTS

Exit mobile version