Home இலங்கை அரசியல் வாக்கு பெட்டிகளுக்கு உச்சளவு பாதுகாப்பு!

வாக்கு பெட்டிகளுக்கு உச்சளவு பாதுகாப்பு!

0

ஜனாதிபதி தேர்தலின் வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் போது  உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தேர்தல் காரியாலயம் இது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

ஒத்துழைப்பு 

வாக்கு பெட்டி எடுத்துச் செல்லும் வாகனம் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ஆயுதம் தரித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த வாகனங்களின் முன்னாலும் பின்னாலும் பொலிஸ் வாகனங்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

Source: https://tamilwin.com/article/full-protection-given-to-ballat-boxes-1725763399

NO COMMENTS

Exit mobile version