Home இலங்கை அரசியல் கிழக்கு ஆளுனரிடம் கஜேந்திரன் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை

கிழக்கு ஆளுனரிடம் கஜேந்திரன் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை

0

Courtesy: H A Roshan

திருகோணமலையில் திருக்கோணேச்சரத்தின் விவகாரத்தில் அப்பட்டமான விடயங்களை கூறி நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிர்வாகம் ஊடாக தங்களும் இணைந்து செயற்படுவதற்கு கிழக்கு ஆளுநர் முயற்சிப்பதை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்(S. Kajendran) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று(13.08.2024)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அப்பட்டமான விடயங்களை கூறி திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தில் தலையிட வேண்டாம்.

தமிழ் மக்களின் இருப்பை பாதுகாருங்கள் மக்கள் காணிக்குள் சட்டவிரோதமாக பௌத்த விகாரைகளைகளையும் அமைக்கின்றனர் இதனை தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கும் கிழக்கு ஆளுனர் இவ் விவகாரத்தில் தலையிட வேண்டாம். நிர்வாக சபை அதற்குதான் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version