Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தலின் முதல் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகும் நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலின் முதல் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகும் நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதல் வாக்களிப்பு முடிவுகளை இரவு 11 மணியளவில் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (11ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் எரிவாயு சிலிண்டரை எடுத்துச்செல்வதில் பிரச்சினை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் முதல் வாக்களிப்பு முடிவுகள்

தேர்தல் தினத்தன்று தனிநபர் ஒருவர் வீதியில் நடமாட முடியும் என்றாலும், ஊர்வலமாகச் செல்வதைத் தடை செய்யும் திறன் பொலிஸாருக்கு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தேர்தல் முடிவைப் பாதிக்கக்கூடிய வன்முறைச் செயலைச் செய்ய யாரும் முயல மாட்டார்கள், அப்படிச் செய்ய எவராலும் முடியாது, வன்முறையைச் செய்ய எவராவது முயன்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி கூட்டங்களில் கலந்துகொள்ளும் பேச்சாளர்களின் செலவுகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version