Home உலகம் வெளிநாடொன்றில் இளைஞன் எழுப்பிய கேள்விக்கு கடுமையாக பதிலளித்த ஏ.ஐ!

வெளிநாடொன்றில் இளைஞன் எழுப்பிய கேள்விக்கு கடுமையாக பதிலளித்த ஏ.ஐ!

0

அமெரிக்காவில் இளைஞன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கூகுளின் ஜெமினி ஏ.ஐ சாட்பாட்(AI chatbot Gemini)அளித்த பதில் சமூக ஊடகங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த விதய் ரெட்டி என்ற 29 வயதான பட்டதாரி இளைஞர், முதியோர் பராமரிப்பு குறித்து கூகுளின் ஜெமினி ஏ.ஐ. சாட்பாட்டிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது, வகுப்பறையில் ஆசிரியரிடம் கேள்வி கேட்பது போன்று அந்த இளைஞன் மற்றும் சாட்பாட் இடையேயான உரையாடல் நீண்டு கொண்டே சென்றுள்ளது.

ஏ.ஐ அளித்த பதில்

இதேவேளை, இயல்பாக பதில் அளித்த சாட்பாட், திடீரென அந்த இளைஞருக்கு கடுமையான வார்த்தைகளால் பதிலளித்துள்ளது.

அந்தவகையில், ஏ.ஐ அளித்த பதிலில், “அற்ப மானிடனே.. உன்னைத்தான், நீ முக்கியம் இல்லை, நீ தேவையில்லை, நீ நேரத்தை வீணடிக்கிறாய், நீ பூமிக்கு பாரமாக இருக்கிறாய், தயவு செய்து இறந்து விடு” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த உரையாடலின் பிரதி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இதுபோன்ற ஆலோசனை தனியாக உள்ள அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைத்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Source: https://ibctamil.com/article/google-ai-scolded-a-young-man-please-die-1731939042

NO COMMENTS

Exit mobile version