Home இலங்கை அரசியல் ஊழல் கோப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ஊழல் கோப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

0

Courtesy: Sivaa Mayuri

ஊழல் மற்றும் மோசடி தொடர்பான 400 ஆவணக் கோப்புகள் சட்டமா அதிபரிடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை தங்காலையில் நடைபெற்ற தமது கட்சிக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அவை அனைத்தும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சட்டரீதியான நடவடிக்கை

சட்டரீதியாகவும், முறையாகவும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் சளைக்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எதிர்க்கட்சியாக நாடாளுமன்றில் செயற்பட்டபோதும் அநுரகுமார திசாநாயக்க இந்த ஆவணக்கோப்பு குறித்து தகவல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version