Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயம்

0

கிளிநொச்சியில்  (Kilinochchi) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது, இன்று (24.10.2024) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி பயணித்த பெண் அரச உத்தியோகத்தரின் கார், மோட்டார் சைக்கிளில் பாதையை கடக்க முற்பட்டவர் மீது மோதி இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

பெண் உத்தியோகத்தர் படுகாயம்

இவ் விபத்தில் காயம் அடைந்த பெண் அரச உத்தியோகத்தரை வீதியால் பயணித்துக்
கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணை கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version