Home இலங்கை சமூகம் உலக வங்கியின் குழுவினருக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

உலக வங்கியின் குழுவினருக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

0

உலக வங்கியின் (World Banl) குழுவினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவிற்கும் (Jayantha Lal Ratnasekera) இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு இன்று 24.10.2024 கிழக்கு மாகாண (Eastern Governor) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

கல்வித் தரத்தினை உயர்த்தல்

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்,
கல்வி அமைச்சின் செயலாளர்
மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் மாகாண ரீதியிலான கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கான திட்டங்கள் குறித்தும்
அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் கல்வித்தரம் படிப்படியாக உயர்ந்து வருவதுடன் அதனைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


YOU MAY LIKE THIS

https://www.youtube.com/embed/M1RKBTsxZ4U

NO COMMENTS

Exit mobile version