மஹரகம, நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
