Home இலங்கை அரசியல் அதற்கு அவர் பொருத்தமான நபரே அல்ல : அநுர அரசை போட்டு தாக்கும் முன்னாள் அமைச்சர்

அதற்கு அவர் பொருத்தமான நபரே அல்ல : அநுர அரசை போட்டு தாக்கும் முன்னாள் அமைச்சர்

0

பொது சேவையை அரசியலற்றதாக்குவதாக அறிவித்து, நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை(Harshana Suriyapperuma) நியமித்ததன் மூலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மிகவும் தவறான முன்னுதாரணமாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

 கலாநிதி சூரியப்பெரும மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் என்றும், பங்குச் சந்தையில் பணியாற்றியதாக கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் என்றும், இது முற்றிலும் அரசியல் நியமனம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

திறமையோ தகுதியோ இல்லை என்பதைக் காட்டியுள்ளார்

கலாநிதி சூரியப்பெரும கடந்த சில மாதங்களாக நிதி அமைச்சின் செயலாளர் பதவியை வகிக்க தனக்கு திறமையோ தகுதியோ இல்லை என்பதைக் காட்டியுள்ளார் என்பதை முழு நிதி அமைச்சகமும் அறிந்திருப்பதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.

நிதி அமைச்சிலோ அல்லது பொது நிர்வாக சேவையிலோ நிதி அமைச்சின் செயலாளர் பதவிக்கு பொருத்தமான நபர் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்புயுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version