Home இலங்கை அரசியல் இன்று கடையடைப்பு.. வர்த்தகர்களை மிரட்டிய தேசிய மக்கள் சக்தி

இன்று கடையடைப்பு.. வர்த்தகர்களை மிரட்டிய தேசிய மக்கள் சக்தி

0

வடக்கு – கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர்கள், கடை உரிமையாளர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் நடவடிக்கைகளுக்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

கதவடைப்பு தொடர்பில் அவர், தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த பதிவில், “இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.

அச்சுறுத்தும் நடவடிக்கை.. 

அமைச்சரவை செய்தித் தொடர்பாளருடனான நேற்று செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, விசாரணை மற்றும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில், கதவடைப்பை மதியம் 12 மணி வரை மட்டுப்படுத்த முடிவு செய்தோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தங்கள் வணிகங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும் அல்லது சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கடை உரிமையாளர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகின்றது. 

இந்நடவடிக்கைகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன் – அத்தகைய மிரட்டல் மக்களின் ஜனநாயக உரிமையான எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தெளிவாக மீறுவதாகும்” தெரிவித்துள்ளார். 

 


you may like this video..

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

NO COMMENTS

Exit mobile version