Home இலங்கை சமூகம் இலங்கையில் மாரடைப்பால் அதிகரிக்கும் மரணங்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் மாரடைப்பால் அதிகரிக்கும் மரணங்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

0

இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவிலான உயிரிழப்புக்கள் பதிவாகியமைக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாரடைப்பால் கணவர் மரணம்! இறப்பைத் தாங்க முடியாது மனைவி உயிர்மாய்ப்பு! தமிழர் பகுதியில் துயரம்

ஆபத்து காரணிகள்

மேலும் தெரிவிக்கையில், இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால் இந்த நோய் நிலை ஏற்படுகிறது. இதை மாரடைப்பு அல்லது ஹாட் ஹெட்டக் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தொற்றா நோய்களுக்கு பல சிறப்பு ஆபத்து காரணிகள் உள்ளன. முதலாவது ஆரோக்கியமற்ற அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெயின் பயன்பாடு, உடல் செயல்பாடு இல்லாமை, புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றின் பயன்பாடு ஆகும்.

ஈரான் அதிபரின் வருகை: இஸ்ரேல் – இலங்கை விமான சேவைகள் நிறுத்தம்

ஏற்படுவதற்கான காரணங்கள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணினிகளின் அதிகரித்த பாவனையினால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகியுள்ளனர். குழந்தைகள் ஒரே இடத்தில் அதிக நேரம் செலவழித்து ஒன்லைன் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

வீட்டில் வயதான இல்லத்தரசிகள் கூட எப்போதும் தொலைக்காட்சி பார்த்து மணிக்கணக்கில் அமர்ந்துதான் இருப்பார்கள். மேலும் வயது வரம்பு இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பது பெரும் சோகம். நாம் முடிந்த போதெல்லாம் நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

யாழில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விதிக்கப்பட்ட புதிய தடை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

NO COMMENTS

Exit mobile version