Home இலங்கை சமூகம் நீர்த்தேக்கத்தில் மாயமான மாணவன்: மீட்பு பணிகள் தீவிரம்

நீர்த்தேக்கத்தில் மாயமான மாணவன்: மீட்பு பணிகள் தீவிரம்

0

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மாணவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாரடைப்பால் கணவர் மரணம்! இறப்பைத் தாங்க முடியாது மனைவி உயிர்மாய்ப்பு! தமிழர் பகுதியில் துயரம்

எச்சரிக்கையை மீறி

சம்பவத்தில் காசல்ரீ தோட்டத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

மேலும், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எச்சரிக்கையை புறக்கணித்து நீர்த்தேக்கத்தின் ஊடாக முன்னும் பின்னுமாக நீந்திய போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஈரான் அதிபரின் வருகை: இஸ்ரேல் – இலங்கை விமான சேவைகள் நிறுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

NO COMMENTS

Exit mobile version