Home இலங்கை அரசியல் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

உதயராசாவின் வேட்புமனுவை ஏற்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

0

Courtesy: Sivaa Mayuri

2024 பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா உட்பட்ட இருவரினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்திற்கு முரணானது

அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனுவை நிராகரித்ததாக மனுதாரர்கள் கூறியிருந்தனர்.

இந்தநிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்று கூறி, அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஆராய்ந்த உயர்நீதிமன்றம்,உண்மைகளை கருத்திற்கொண்டு, பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.  

NO COMMENTS

Exit mobile version