Home சினிமா CWCல் சண்டை தொடங்கியது இப்படித்தான்.. மணிமேகலை – பிரியங்கா பிரச்சனையின் முழு விவரம்

CWCல் சண்டை தொடங்கியது இப்படித்தான்.. மணிமேகலை – பிரியங்கா பிரச்சனையின் முழு விவரம்

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ல் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே நடந்த சண்டை பற்றி தான் இணையத்தில் விவாதங்கள் தீயாக நடந்து கொண்டிருக்கிறது.

பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவரில் யார் சரி என இணையத்தில் பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.

சண்டை தொடங்கியது எப்படி

இந்நிலையில் இந்த சண்டை தொடங்கியது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். இரண்டு வாரங்களுக்கு முன்பு எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. அப்போது முதலில் திவ்யா துரைசாமி எலிமினேட் ஆனார். அதன் பின் விடிவி கணேஷ் எலிமினேட் ஆனார்.

திவ்யா துரைசாமி எலிமினேஷன் நேரத்தில் தான் பிரச்சனை தொடங்கி இருக்கிறது. திவ்யா துரைசாமி ப்ரியங்காவுக்கு நன்றி கூற, அதற்கு பதில் கொடுக்கும் வகையில் பிரியங்காவும் நீண்ட நேரம் பேசி இருக்கிறார்.

தொகுப்பாளர் பேச வேண்டிய விஷயங்களை கூட பிரியங்கா அப்போது கூறி முடித்துவிட்டாராம். அனைத்தையுமே நீங்களே பேசிவிட்டால் நான் இங்கே எதற்கு இருக்கிறேன் என மணிமேகலை கேட்டிருக்கிறார். இது சண்டையாக மாறி இருக்கிறது.

அதன் பிறகு அப்படி பேசியது தவறு தான் என மணிமேகலையை பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்கும்படி டீம் கூறி இருக்கின்றனர். அவர் மறுத்து இருக்கிறார். அடுத்த வார எபிசோடு ஷூட்டிங்கிலும் அந்த பிரச்சனை தொடர்ந்து இருக்கிறது.

கோபமான மணிமேகலை

பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் மீண்டும் மீண்டும் கேட்டதால் கோபமாகி மணிமேகலை ஷூட்டிங்கில் இருந்தே வெளியேறி இருக்கிறார். அதனால் பாதி எபிசோடை ரக்ஷன் மட்டும் தொகுத்து வழங்கி இருப்பார்.

அதற்கு பிறகு மணிமேகலை இதுபற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அது பெரிய சர்ச்சையாக மாறியது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

பிரியங்கா vs மணிமேகலை சண்டையில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என தொடர்ந்து விவாதம் நடந்து கொண்டிருப்பதால், அது எங்கே சென்று முடிகிறது என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

NO COMMENTS

Exit mobile version