Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி…! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி…! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

0

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு, மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தலில் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு புள்ளடியை இடமுடியும். அதேவேளை விருப்பு வாக்குகளையும் வழங்குவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்களிக்கும் முறை

தாம் விரும்பும் வேட்பாளருக்கு முதலாவது இலக்கத்தையும் விருப்பம் ஏற்படுமாயின் ஏனைய இரண்டாம், மூன்றாம் வேட்பாளர்களுக்கு உரிய இலக்கங்களை பதிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

புள்ளிடியோடு இலக்கங்களை பதிவு செய்தால் உரிய வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


விருப்பு வாக்கு

1982ஆம் ஆண்டிலிருந்து இதுவரை காலமும் நடைபெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் விருப்பு வாக்குகளை எண்ணத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றது.

இரண்டாவது வாக்குகளில் எண்ணுவதற்கான தேவைகள் ஏற்படுமாயின் அதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version