Home இலங்கை அரசியல் சஜித்துக்கு ஆதரவு வழங்க திரைமறைவில் கைமாறிய பெருந்தொகை பணம்

சஜித்துக்கு ஆதரவு வழங்க திரைமறைவில் கைமாறிய பெருந்தொகை பணம்

0

தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக 30 இலட்சம் ரூபாயை பெற்றுள்ளதாக  அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த அவர், 

“சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழிலதிபர் லக்கி என்பவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்களை மாவை சேனாதிராஜாவின் மகன் கலை அமுதன் பெற்றதாக நம்பத் தகுந்த தகவல்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில் வாக்குச் சீட்டை காட்டி அவருக்கு ஒரு குத்து இவருக்கு ஒரு குத்து என பணம் வாங்கியவர்கள் எல்லோருக்கும் புள்ளடி போட்ட வாக்குச் சீட்டை காண்பித்த மையை படத்தில் பார்த்திருக்கிறோம்.

அவ்வாறு சம்பவமாக மாவை மற்றும் மகனின் செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது” என்றார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

NO COMMENTS

Exit mobile version