Home இலங்கை அரசியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் : ரோஹித அபேகுணவர்தன அறிவிப்பு

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் : ரோஹித அபேகுணவர்தன அறிவிப்பு

0

கண்டியில் (Kandy) அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.

நேற்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இதில் ரோஹித அபேகுணவர்தன தொடர்பில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன். நான் பொறுப்புடன் சொல்கிறேன். இந்த வாகனச் சம்பவத்தில் எனக்கு எந்த வகையிலும் தொடர்பிருந்தால், நான் அரசியலில் இருந்து விலகுவேன்.

உண்மையைக் கண்டறியுங்கள்

நான் அரசியல் செய்வது ஏமாற்றவோ திருடவோ அல்ல. எனவே, அவ்வாறான விடயங்கள் இருப்பின்  செயற்படுங்கள் என்பதை பொறுப்புடன் தெளிவாகக் கூறுகின்றேன்.

இப்போது இது மருமகனின் சகோதரனுடையது என்று கூறப்படுகிறது. இப்போது யாராவது மருமகனின் அண்ணனாக இருந்தால், அவர்கள் தவறு செய்திருந்தால் அதற்கு நானா பொறுப்பு?

இது என் வீடு. இந்த வீட்டிற்கு தினமும் மக்கள் வந்து செல்கிறார்கள், உணவு உண்பார்கள், எங்களிடம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன, ஆனால் நாங்கள் எதையும் பயன்படுத்தவில்லை.

எனவே இங்கு நான் மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும், எனது நண்பர்கள் யாராவது அநீதி இழைத்தாலும் ரோஹித அபேகுணவர்தனதான் அதற்கு பொறுப்பா?

கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் 

அப்படியென்றால் வேறு யாராவது தவறு செய்தால் அதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டுமா? நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை மிகத் தெளிவாகக் குற்றம் சாட்டவும்.

இந்த குற்றச்சாட்டில் எனக்கு தொடர்பு உள்ளதா என்பதை நிரூபித்தால் தேர்தல் வேட்புமனுவை மீளப் பெற்றுக்கொள்வேன். இதில் ரோஹித அபேகுணவர்தன சம்பந்தப்பட்டிருப்பாரா என்பதை யாரேனும் நிரூபிக்குமாறு நான் சவால் விடுக்கின்றேன். நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?“ என தெரிவித்தார் 

கண்டி குற்றத்தடுப்புப் பிரிவினர் அண்மையில் கண்டி, அனிவத்தையில் உள்ள குடியிருப்பு ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் BMW மற்றும் சொகுசு SUV வாகனம் ஒன்றைக் கண்டுபிடித்ததை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாகனம் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் அவர் துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version