Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் தேர்தல்கள் குறித்து ஐ.எம்.எப்பின் நிலைப்பாடு

இலங்கையின் தேர்தல்கள் குறித்து ஐ.எம்.எப்பின் நிலைப்பாடு

0

சர்வதேச நாணய நிதியத்திற்கு (International Monetary Fund) இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அறிவித்துள்ளது.

இதனை சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் மூத்த தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாவது மதிப்பீடு தொடர்பான எண்ணங்களை தெரிவிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகள் நடத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தேர்தல்

அத்துடன் எந்தவொரு நாட்டின் ஜனநாயகத்தையும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நேரத்தை பாதிக்கும் என குறிப்பிட்டார்.

இதேவேளை உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version