Home இலங்கை சமூகம் மாற்று வழியை பயன்படுத்துங்கள்: வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள்

மாற்று வழியை பயன்படுத்துங்கள்: வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள்

0

கொஹுவல சந்தி (Kohuwala Junction) வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமையாலேயே நாளை (15) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது. 

பொதுமக்களிடம் வேண்டுகோள்

அத்துடன்,மேம்பாலம் நிர்மாணப் பணிகள் 2 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், கொஹுவல பாலத்தை நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்கள் அப்பகுதியுனூடாக பயணப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version