Home இலங்கை மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

0
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார்.

 

குறித்த பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்றிற்கு அமைவாக நீதிமன்றம் விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Source: https://samugammedia.com/rohith-rajapaksha-appeared-at-the-central-criminal-investigation-department-1782364330

NO COMMENTS

Exit mobile version