Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு பகுதி மக்களுக்கு அனர்த்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

முல்லைத்தீவு பகுதி மக்களுக்கு அனர்த்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

0

Courtesy: Thavaseelan shanmugam

தண்ணிமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால்,
தற்போதைய (09.12.2025, P.M 9.00) மழை நிலையை கருத்திற் கொண்டு வான் கதவுகளை
திறக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் வயல்களில் உள்ள அனைத்து விவசாயிகளும்
உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து செல்லுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது மிக அவசரமான அறிவிப்பு எனவும் தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதிக மழை 

அதேவேளை, முல்லைத்தீவு – கோடாலிக்கல்லு குளத்தின் அணைபகுதி ஏற்கனவே
உடைந்துள்ளதால், இரவு 9.30 மணிப்படி, பெய்து வரும் தொடர்ச்சியான
கடும் மழையினால் அப்பகுதியில் பெருமளவு நீரோட்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக
கோடாலிக்கல்லு முன்புறத்தில் உள்ள முள்ளியவளை – நெடுங்கேணி வீதி நீரில்
மூழ்கியுள்ளது.

எனவே, இந்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் முக்கியமாக இரவு நேரங்களில்
பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகள்
இருப்பின், முள்ளியவளை – ஒட்டிசுட்டான் – நெடுங்கேணி வீதியை பயன்படுத்தவும் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version