Home இலங்கை சமூகம் அரச வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் தகவல் தெரிவிக்க புதிய துரித அழைப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரினால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அவதானிக்கும் பொது மக்கள் 1997 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

சன்மானம் அறிவிப்பு

இதற்கமைய, துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச அதிகாரிகள் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களை முறையாக பராமரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களில் வாகனங்களை மாற்றுவதற்குப் பதிலாக, அவற்றைப் பராமரிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version