Home முக்கியச் செய்திகள் பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை

பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை

0

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலானது இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

யாழில் பெண்ணொருவருக்கு நடந்துள்ள கொடூரம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

சிற்றுண்டிச்சாலைகள் குறித்து அதிக கவனம் 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,நாடளாவிய ரீதியில் இந்நாட்களில் வயிற்றோட்டம் தொடர்பான நோயாளர்கள் அதிகம் பதிவாகி வருவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு பாடசாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமாக படகு மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற ஐவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

NO COMMENTS

Exit mobile version