Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் : உயர்த்தப்படவுள்ள உர மானியம்

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் : உயர்த்தப்படவுள்ள உர மானியம்

0

சிறிய நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை ஏக்கருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக உயர்த்துவதற்கு இலங்கை (Sri Lanka) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera), எதிர்வரும் மகா (பிரதான) பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க அதிக தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி கணக்கு

அத்தோடு, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறு நெல் விவசாயிகளுக்கு நடப்பு பயிர்ச்செய்கைப் பருவத்துக்காக இரண்டு ஏக்கர் வரையிலான ஏக்கருக்கு 15,000 ரூபா வழங்குவதற்கு இம்மாத முற்பகுதியில் அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/increase-fertilizer-subsidy-to-small-paddy-farmers-1724804273

NO COMMENTS

Exit mobile version