இலங்கையின் தமிழர் பகுதிகளில் இந்திய இராணுவம் தரையிறங்க முற்பட்ட போதும் அந்த முயற்சிகள் கடந்த காலங்களில் வெற்றியளிக்கவில்லை.
இதனடிப்படையில், ஒரு நாட்டின் கடல் எல்லையில் அந்த நாட்டின் அனுமதியின்றி வேறொரு நாடு அதிகாரப் போட்டியில் ஈடுபட முடியாது என அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் என இரு தரப்பினரையும் திருப்தியடைய செய்யவில்லை.
எதிர்காலத்தில் இலங்கை உடனான உறவை கட்டியமைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடும்போது இவற்றை கருத்திற்கொள்ள வேண்டும் என திருநாவுக்கரசு சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
Source: https://tamilwin.com/article/indian-army-preparing-to-land-in-tamil-place-1738244429
