Home இந்தியா தமிழ்க் கட்சிகளை சந்திக்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

தமிழ்க் கட்சிகளை சந்திக்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

0

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர்  எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வருகை தரவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கைக்கான பயணத்துக்கு முன்னார் ஜெய்சங்கரின் பயணம் இடம்பெறும் என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை வரும் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் மலையகத் தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

உயர்மட்ட பேச்சுவார்த்தைகள்

அத்துடன், இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும், இந்த விஜயத்தின் போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அவர் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான பயணத்தின் போது இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version