Home இலங்கை அரசியல் மன்னார் மாவட்ட வாக்காளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

மன்னார் மாவட்ட வாக்காளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து
607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல்
தெரிவத்தாட்சி அலுவலர் கனக சபாபதி கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்
போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட வாக்கு எண்ணும் நிலையம்

மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வன்னி தேர்தல்
தொகுதி மன்னார் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான சகல ஏற்பாடுகளும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளதோடு மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு
இடம் பெற உள்ளது.

எமது நிர்வாக தேவை கருதி குறித்த 98 வாக்களிப்பு நிலையங்களும்
25 வலயங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வலயமும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி
அலுவலர் ஊடாக குறித்த 98 வாக்களிப்பு நிலையங்களும் மேற்பார்வையின் கீழ்
செயல்படும்.

மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமாக மன்னார் மாவட்டச் செயலகம் தெரிவு
செய்யப்பட்டுள்ளது.அதற்குள் 7 வாக்கு எண்ணும் நிலையங்கள்
ஸ்தாபிக்கப்படும்.

விசேட தற்காலிக அடையாள அட்டை

அதனூடாக மாவட்டத்தின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும்.

மன்னார் மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பை பொறுத்தமட்டில் மாவட்டத்தில்
கடமையாற்றுகின்ற 10 ஆயிரத்து 36 உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்கள்
கிடைக்கப்பெற்று வாக்களிப்பு இடம் பெற்றது.

இதில் 9 ஆயிரத்து 945 உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பை
மேற்கொண்டுள்ளனர். 91 பேர் வாக்களிக்கவில்லை.குறித்த விண்ணப்பங்கள் திருப்பி
அனுப்பப்பட்டுள்ளன.ஜனாதிபதி தேர்தல் குறித்து அனைத்து பயிற்சி
வகுப்புக்களும் இடம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை சிறப்பான முறையில் நடத்துவதற்கு பொது மக்களை தெளிவு
படுத்தும் வகையில் ஒலி பெருக்கி மூலம் கிராமங்கள் ஊடாக தெழிவு படுத்தப்பட்டு
வருகிறது.

மேலும் வாக்களிக்க தேர்தல் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டை
இல்லாதவர்களுக்கு விசேட தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகளும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க உள்ள விசேட தேவையுடையவர்களுக்கான
ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version