Home இலங்கை சமூகம் சங்கு சின்னத்திற்கு புள்ளடியிட்ட வாக்கு சீட்டை பதிவிட்ட முக்கியஸ்தர்: தொடரும் விசாரணை

சங்கு சின்னத்திற்கு புள்ளடியிட்ட வாக்கு சீட்டை பதிவிட்ட முக்கியஸ்தர்: தொடரும் விசாரணை

0

வாக்கு சீட்டை முகநூலில் பதிவிட்ட ஈபிஆர்எல்எப் கட்சியின் உயர் பீட உறுப்பினர்
மீது வவுனியா காவல்துறையினர் நேற்று (07.09) விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவரது
கைத்தொலைபேசியும் பகுப்பாய்வுக்காக பெறப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பானது கடந்த 4,5,6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற நிலையில் 5
ஆம் திகதி மாலை தனக்கு சொந்தமான முகப்புத்தகத்தில் ஈபிஆர்எல்எப் கட்சியின்
உயர் பீட உறுப்பினரும், பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுகட்டமைப்பின் வவுனியா
மாவட்ட நிதி கையாளுகைக்கு பொறுப்பாளருமான க.அருந்தவராசா (மேழிக்குமரன்) சங்கு
சின்னத்திற்கு புள்ளடியிடப்பட்ட வாக்கு சீட்டை தனது முகப்புத்தகத்தில்
பதிவேற்றியிருந்தார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர், வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்
மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் என்பவற்றுக்கு செய்யப்பட்ட
முறைப்பாட்டுக்கு அமைய உதவித் தேர்தல் ஆணையாளரால் வவுனியா காவல்துறையினருக்கு
முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசாரணை

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த நபரை அழைத்து விசாரணை நடத்தி வவுனியா
காவல்துறையினர் அவரது கைத்தொலைபேசியை பெற்று அதனை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்க
நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சங்கு சின்னத்திற்கு புள்ளடியிட்ட வாக்கு சீட்டை படமெடுத்த ஆசிரியர்
ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version