Home இலங்கை அரசியல் ஈரான் ஜனாதிபதியின் வருகைக்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை

ஈரான் ஜனாதிபதியின் வருகைக்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை

0

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வருகைக்காக அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்தளையிலிருந்து உமா ஓயா வரையிலும் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையான 172 கிலோமீற்றர் தரைவழியான பயணத்திற்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் பலத்த பாதுகாப்பை நிலைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த ஈரான் ஜனாதிபதி, நாளை காலை மத்தளை விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளார்.

மைத்திரி தரப்பு வகுக்கும் வியூகம்! சு.கவைக் கைப்பற்ற மும்முனைப் போட்டி


விசேட விமானம்

அங்கிருந்து தரை மார்க்கமாக 141 கிலோமீற்றர் தூரம் சென்று உமாஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அங்கிருந்து மீண்டும் மத்தளைக்கு வந்து விசேட விமானம் மூலம் மத்தளையில் இருந்து கட்டுநாயக்கவிற்கு செல்லவுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 31 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொழும்பிற்கு சென்றடைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்ய தம்மிக்க பெரேரா முயற்சி

தீவிர பாதுகாப்பு

அதன் பின்னர் தரைவழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பும் ஈரான் ஜனாதிபதி, நாளைய தினமே நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி மற்றும் முப்படையினரின் பாதுகாப்பை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் வழங்குவார்கள் என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version