Home இலங்கை அரசியல் ஈரான் அதிபரின் இலங்கை விஜயம்: பலப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு

ஈரான் அதிபரின் இலங்கை விஜயம்: பலப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு

0

ஈரான் – இஸ்ரேலுக்கு இடையிலான போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் அதிபர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) பூரண பாதுகாப்பை சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தமின்றி பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்…அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!

அதிபர் பாதுகாப்பு பிரிவு

இந்த நிலையில் ஈரான் அதிபரின் விஜயத்தின் போது சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவு மிக நெருக்கமான பாதுகாப்பை வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பாதுகாப்பு ஏற்பாடுகளை இராணுவப் படை உட்பட முப்படையினரும் வழங்கவுள்ளனர்.

ஈரான் அதிபர் மத்தள விமான நிலையத்தை  வந்தடைந்ததும் பிரமுகர் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் உமா ஓயாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்.

யுத்தத்தின் வலியை சுட்டும் புகைப்படத்துக்கு கிடைத்தவிருது!

அதிபர் ரணிலுடன் கலந்துரையாடல் 

கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் அதிபர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை ஈரான் அதிபரின் இலங்கை விஜயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் நேற்று (18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவைப் பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடும்! மோடியின் கருத்துக்கு இலங்கையின் பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.

NO COMMENTS

Exit mobile version