Home உலகம் ஈரான் மீதான இஸ்ரேலின் பதிலடி தாக்குதல்! காலவரையறையின்றி மூடப்பட்ட வான்பரப்புகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் பதிலடி தாக்குதல்! காலவரையறையின்றி மூடப்பட்ட வான்பரப்புகள்

0

ஈரானிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான், சிரியா மற்றும்  ஈராக் ஆகியவை தங்களது வான்பரப்பை காலவரையறையின்றி மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், மறுஅறிவித்தல் வரும் வரை விமானப் போக்குவரத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, ஈராக் வான்வெளியில் விமானப் போக்குவரத்தை பாதுகாக்க இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் பதிலடி

இதேவேளை, ஈரானின் இலக்குகளுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் தாம் ஈடுபடவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்மையில், இஸ்ரேலுக்கு எதிரான  ஈரானின் பாரிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது.

அதன்படி, தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் வெடிப்புகள் பற்றிய அறிக்கைகள் வெளிவந்தன.

இஸ்ரேலிய இராணுவம் (IDF) இந்த நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதுடன் ஈரானிய இராணுவ தளங்கள்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. 

NO COMMENTS

Exit mobile version