Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் அடுத்தவாரம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்றதை தொடர்ந்து இந்த வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், அவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்தகட்டமாக முன்னெடுக்கக்கூடிய நகர்வுகள் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் தீர்மானங்கள் 

அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு முரணாகச் செயற்பட்ட கட்சி உறுப்பினர்கள் தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்படும் எனக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடமும் இவ்வார இறுதியில் கூடும் என்றும் அதன் தலைவர் மனோகணேசன் (Mano Ganesan) தெரிவித்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் முக்கியமான அரசியல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version