Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் பாராட்டத்தக்கது: முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் புகழாரம்

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் பாராட்டத்தக்கது: முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் புகழாரம்

0

தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள விடயத்தை பாராட்டுவதாகவும் வடக்கு
கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் மூவின மக்களாலும் நேசிக்கப்பட்டு ஒரு வெற்றி
வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் (Sajith Premadasa) வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முன்னாள்
கிழக்கு மாகாண ஆளுநர் எ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்றையதினம் (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், “நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் எமது ஜனாதிபதி வேட்பாளர்
சஜித் பிரேமதாசாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

வடக்கு கிழக்கு அபிவிருத்தி

அவரது நிர்வாகத்தில்
மிகச் சிறப்பாக பொருளாதாரக் கட்டி எழுப்பப்பட்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள
மக்களது எதிர்காலத்தை முன்னேற்றக் கூடிய வகையிலும் சிறப்பானதொரு தேர்தல்
விஞ்ஞாபனத்தை முன்வைத்து அவர் தேர்தல் களத்தில் நிற்கின்றார்.

இன்று தமிழரசு கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள விடயத்தை நாம் வரவேற்று
பாராட்டுகின்றோம்

இதன் மூலம் வடக்கு கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் மூவின மக்களாலும்
நேசிக்கப்பட்டு ஒரு வெற்றி வேட்பாளராக காணப்படுகின்றார்.

இதன் மூலம் வடக்கு கிழக்கில் நிலவுகின்ற அதிகார பிரச்சனைகளுக்குரிய தீர்வு
அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள வடக்கு கிழக்கு
பகுதிகளுக்கான விசேட அபிவிருத்தி திட்ட செயற்பாடுகளை வெளிநாட்டு நிதி
உதவியுடன் முன்னெடுக்க உள்ளார் எனவே வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களும்
அவருக்கு ஆதரவு தெரிவித்து வெற்றியின் பங்காளர்களாக வேண்டும்” என்றார்.

 

NO COMMENTS

Exit mobile version