Home இலங்கை அரசியல் யாழில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

0

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) விசேட
அனுமதியுடன் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28.8.2024) நடைபெற்றுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), வடக்கு மாகாண ஆளுநர்
பி.எஸ்.எம்.சாள்ஸ் (PSM Charles) , யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபன் (Marudlingam Pradeepan) ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

வேலைத்திட்டங்கள் 

இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்
வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலநதுறையாடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran ), தர்மலிங்கம்
சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan), வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் (CV K Sivagnanam), யாழ்ப்பாண
மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும்
கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version